News Just In

9/14/2020 03:12:00 PM

சேதன உரம் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!


இலங்கை அரசாங்கத்தின் உர நிவாரண திட்டத்தின் கீழ் சேதன உரம் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை அதிகரிப்பது மற்றும் அவர்களின் உற்பத்திகளுக்கு அதிகளவான விலையை பெற்றுக்கொள்ப்பது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திட்டம் மூன்று வருடங்களுக்குள் தேசிய சேதன உரங்களின் பயன்பாட்டை 30 சதவீதம் அதிகரிக்கச் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று சமீபத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் தலைமையில் இடம்பெற்றது.

No comments: