News Just In

6/22/2020 08:47:00 AM

இன்று முதல் கட்டங் கட்டமாக திறக்கப்படவுள்ள பல்கலைக்கழகங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகம் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று முதல் கட்டங் கட்டமாக திறக்கப்படவுள்ளது.

பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி கைவிடப்பட்ட தேசிய அடையாள அட்டையை பெறும் ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பமாகின்றது.

ஆட்பதிவு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கமைய இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

No comments: