திங்கட்கிழமை முதல் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால் அலுவலக நேரங்களில் பணியிடங்களுக்கு வரும் ஊழியர்களை நலன் கருதியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பேருந்துகள் மாவட்ட எல்லைக்குள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
எவ்வாறெனினும் மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கினால் அதற்கேற்ப பேருந்துகள் பயணங்கள் தொடங்கப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை மேலும் ஏதேனும் நிறுவனங்கள் கோரினால், ஒரு குறிப்பிட்ட கட்டணத்திற்கிணங்க ஊழியர்களை கொண்டு செல்ல பேருந்துகளை வழங்கவும் இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 426 பேருந்துகள் தற்போது நாடு முழுவதும் மருத்துவ ஊழியர்களின் நலன் கருதி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே பேருந்துகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments: