மட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (16) காலை மட்டக்களப்பு-திருகோணமலை பிரதான வீதி சந்திவெளியில், மட்டக்களப்பில் இருந்து கிரான் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிறிய ரக லொரியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் பதுளை நுணுகலையைச் சேர்ந்த ரங்கன் ராமசாமி (71 வயது) என்பவரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.
விபத்தில் பலியானவரின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிறியரக லொறியினது சாரதி ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று (16) காலை மட்டக்களப்பு-திருகோணமலை பிரதான வீதி சந்திவெளியில், மட்டக்களப்பில் இருந்து கிரான் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிறிய ரக லொரியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் பதுளை நுணுகலையைச் சேர்ந்த ரங்கன் ராமசாமி (71 வயது) என்பவரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.
விபத்தில் பலியானவரின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிறியரக லொறியினது சாரதி ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.





No comments: