மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று(31) லைற்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் அதிபர் திருமதி சி.எஸ்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் அவர்களும் , சிறப்பு அதிதிகளாக மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், திட்டமிடலுக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ், கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி சாமினி ரவிராஜா,
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன்,தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர் அ.ஜெயநாதன் மாநகர சபை உறுப்பினர் ஐ.ஸ்ரீதரன் ஆகியோரும் ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பெற்றார்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பாக இடம்பெற்ற பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு, விளையாட்டு சுடர் ஏற்றுதல், அணிநடை, உடற்பயிற்சி,, மைதான விளையாட்டுகள், அதிதிகள் உரை, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
No comments: