News Just In

12/11/2019 05:00:00 PM

கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடி- உப்போடை, நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முகூர்த்தகால் நடும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) பிரம்மஸ்ரீ பரமேஸ்வரக் குருக்கள் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தலைவர் எஸ்.சந்திரகுமார் அவர்கள்  தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் செயலாளர் எஸ்.விஜயகுமார், முகாமையாளர் ந.ஹரிதாஸ், பொருளாளர் கே.சுகந்தன், ஆலய அங்கத்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வருகின்ற 30.01.2020 அன்று ஆலயத்தின் கும்பாபிஷேகம் இடம்பெற இருக்கின்றது  மற்றும் எண்ணெய்காப்பு நிகழ்வானது 28.01.2020 தொடக்கம் 29.01.2020 வரை இரு நாட்கள் இடம்பெறும்.

நடைபெறவிருக்கும் கும்பாபிஷேக  கிரிகைகளின் ஆரம்ப நிகழ்வாக இன்று சுப நாளில் முகூர்த்தக்கால் நடப்படும் வைபவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






















No comments: