News Just In

11/05/2019 01:26:00 PM

மட்டக்களப்பில் மதவாதிகளால் சரஸ்வதி சிலை உடைப்பு


மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சிலை மதவாதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. அரசியல் சூழ்நிலையில் சமூகத்தின் ஒற்றுமையினை சீர்குலைக்கும் வண்ணம் இச் செயற்பாடு நடைபெற்றுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட குறித்த சரஸ்வதி சிலையினை உடைத்தமையானது பாடசாலை மற்றும் பிரதேச சமூகத்தின் மத்தியில் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்தினை தெரிவிக்கும் நபர்கள் மற்றும் முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தினர் அற்ப தேவைகளுக்காக மதம் மாறிய மதவாதிகளாலேயே இச் சிலை உடைக்கப்பட்டுள்ளது என கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறு இருப்பினும் பாடசாலையில் கல்வியின் தெய்வமாக போற்றப்படுகின்ற சரஸ்வதி சிலையினை உடைத்தமை ஒரு கண்டனத்துக்குரிய குற்றமாகும் என சமூக நலன் விரும்பிகள் கூறுகின்றனர்.





No comments: