News Just In

11/12/2019 12:52:00 PM

முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவையாற்றும் சித்தாண்டி ஸ்ரீமுருகன் வைத்தியசாலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சித்தாண்டி கிராமத்தில் மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள ஸ்ரீமுருகன் வைத்தியசாலை முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவையாற்றி வருகின்றது.

இந்த வைத்தியசாலையானது சித்தர்கள் அருளிய முறையினை கொண்டு பரம்பரை பரம்பரையாக 50 ஆண்டுகளாக சேவையாற்றி வருகின்றது. முறிவு வைத்தியர் பொன்னுத்துரை கருணாகரன் அவர்கள் தனது மகன் சோபனன் உதவியுடன் குறித்த முறிவு வைத்திய சேவையை தற்போது மேற்கொண்டுவருகின்றார். 

இவரது சேவையை பாராட்டி செங்கலடி பிரதேச செயலகம்மற்றும் பல்வேறு பொது அமைப்புக்களாலும் இவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். 

தமிழரின் பண்டைய கலைகளில் ஒன்றான முறிவு வைத்தியத்தை பணத்தினை முதன்மைப்படுத்தாமல் சேவை நோக்காகவே இவர்கள் பரம்பரையாக மேற்கொண்டுவருகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்  பல இடங்களிலிருந்தும் பொதுமக்கள் முறிவு வைத்தியத்திற்காக இங்கு வருகை தருவது மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சிகிச்சை பெறவருகின்றமை மட்டக்களப்புக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

No comments: