News Just In

10/15/2019 05:17:00 PM

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வு

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வு திங்கட்கிழமை 14ம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த முதியோர் தின நிகழ்வினை, மண்முனை மேற்கு பிரதேச செயலகமும், விவேகானந்தா முதியோர் சம்மேளனமும் இணைந்து நடாத்தியது.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ப.விஸ்வகோகிலன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது முதியோர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றதுடன் பிரதேசத்தின் முதியோர்கள் பொன்னாடை அணிவித்து அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இப்பிரதேசத்தில் மிக சிறப்பாக இயங்கியவரும் முதியோர் அமைப்புக்கள் பாரட்டப்பட்டதுடன் எதிர்காலத்தில் முதியோர் அமைப்புக்கள் மேலும் பலமானதாக அமைய பிரதேச செயலகத்தினால் ஆன பங்களிப்புக்கள் உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என இதன்போது அவ் அமைப்புக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

No comments: