பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து பத்தாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள "காலி கலந்துரையாடல்-2019" சர்வதேச கடல் மாநாடு இன்று திங்கட்கிழமை (21) கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில் ஆரம்பமானது.
55 நாடுகள், 12 சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மூன்று பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த கரையோர பாதுகாப்பு ஆர்வலர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரது பங்குபற்றலுடன் "சர்வதேச கரையோரப் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான மனநிலையை உருவாக்குதல் - இந்த தசாப்தத்திற்கான மீளாய்வு " என்ற கருப்பொருளின் கீழ் இன்றும் நாளையும் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
No comments: