நூருல் ஹுதா உமர்
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த மல்டி மீடியா ப்ராஜெக்டர் ஒன்று வழங்கி வைக்கும் நிகழ்வு, பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையில் (2026.06.03) பாடசாலையில் இடம்பெற்றது.
இந்த அன்பளிப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் பொறியியலாளர் திரு. அன்வர் சமீர் அவர்களின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இதற்கான வேண்டுகோளை பாடசாலை அதிபர் முன்வைத்திருந்ததுடன், DP Education நிறுவனத்தின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண இணைப்பாளர் திரு. எம்.ஜே. மறூஸ் மற்றும் இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். சமீறுல் இலாஹி ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இது சாத்தியமானது.
பாடசாலையின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த Multimedia Projector, அதிகாரப்பூர்வமாக அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்கள், மாணவர்களின் நலன் கருதி தனது வேண்டுகோளை ஏற்று சொந்த நிதியில் இத்தகைய மதிப்புமிக்க உதவியை வழங்கிய பொறியியலாளர் அன்வர் சமீர் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
பாடசாலையின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் இந்த உதவி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அன்பளிப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் பொறியியலாளர் திரு. அன்வர் சமீர் அவர்களின் சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டது. இதற்கான வேண்டுகோளை பாடசாலை அதிபர் முன்வைத்திருந்ததுடன், DP Education நிறுவனத்தின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண இணைப்பாளர் திரு. எம்.ஜே. மறூஸ் மற்றும் இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். சமீறுல் இலாஹி ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் இது சாத்தியமானது.
பாடசாலையின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த Multimedia Projector, அதிகாரப்பூர்வமாக அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்கள், மாணவர்களின் நலன் கருதி தனது வேண்டுகோளை ஏற்று சொந்த நிதியில் இத்தகைய மதிப்புமிக்க உதவியை வழங்கிய பொறியியலாளர் அன்வர் சமீர் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
பாடசாலையின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தும் இந்த உதவி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
No comments: