
உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான், தனது ‘கொசு படகுகள்’ (Mosquito Boats) எனப்படும் ஆயிரக்கணக்கான சிறிய, அதிவேக தாக்குதல் படகுகளை பயன்படுத்தி அமெரிக்க கடற்படைக்கு எதிராக புதிய சவாலை உருவாக்கியுள்ளது.
இந்த படகுகள் 40 முதல் 60 knots வேகத்தில் செல்லக்கூடியவை. இயந்திரத் துப்பாக்கிகள், ரொக்கெட்டுகள், சில சமயங்களில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகளை அமைக்கும் கருவிகளுடன் முழுமையாக ஆயுதங்கள் நிறைந்துள்ளன.
ட்ரோன்கள் மற்றும் கரையோர ஏவுகணைகளின் ஆதரவுடன், இவை கூட்டமாக தாக்கும் திறன் கொண்டவை.
ஈரான், தனது ‘கொசு படகுகள்’ (Mosquito Boats) எனப்படும் ஆயிரக்கணக்கான சிறிய, அதிவேக தாக்குதல் படகுகளை பயன்படுத்தி அமெரிக்க கடற்படைக்கு எதிராக புதிய சவாலை உருவாக்கியுள்ளது.
இந்த படகுகள் 40 முதல் 60 knots வேகத்தில் செல்லக்கூடியவை. இயந்திரத் துப்பாக்கிகள், ரொக்கெட்டுகள், சில சமயங்களில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகளை அமைக்கும் கருவிகளுடன் முழுமையாக ஆயுதங்கள் நிறைந்துள்ளன.
ட்ரோன்கள் மற்றும் கரையோர ஏவுகணைகளின் ஆதரவுடன், இவை கூட்டமாக தாக்கும் திறன் கொண்டவை.
“இவை சிறியவை, தொந்தரவானவை, ஆனால் கடுமையாகக் கடிக்கும். உலகின் மிக முக்கியமான கடல் பாதையை ஆபத்துக்குள் தள்ளும் சக்தி இவைகளுக்கு உள்ளது.” என இந்த படகுகள் குறித்து முன்னாள் பெண்டகன் அதிகாரி அலெக்ஸ் பிளிட்சாஸ் கூறியுள்ளார்.
பெரிய போர் கப்பல்களை அழிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்திய நிலையில், இந்த சிறிய படகுகள் ரேடாரில் கண்டுபிடிக்க கடினம், கரையோரத்தில் மறைவது எளிது, மேலும் குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதால் ஈரானுக்கு பெரும் நன்மை அளிக்கின்றன.
ஈரான், ஹார்முஸ் நீரிணையை கடுமையான மேலாண்மையின் கீழ் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா மறித்திருப்பது நம்பிக்கையை மீறும் செயல் எனக் கூறி, இரு தரப்புகளும் மீண்டும் மோதலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்த ‘கொசு படகுகள்’ உலகளாவிய எண்ணெய் விலை மற்றும் வர்த்தக பாதைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
No comments: