News Just In

2/05/2026 08:25:00 AM

குஜராத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்கள் இலங்கையில் கண்காட்சி

குஜராத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்கள் இலங்கையில் கண்காட்சி






கொழும்புவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தரின் நினைவுச் சின்னங்கள்.


 குஜராத்திலிருந்து கொண்டு செல்​லப்​பட்ட புத்​தரின் நினை​வுச் சின்​னங்​கள் வரும் 11-ம் தேதி வரை இலங்​கை​யில் நடை​பெறும் கண்​காட்​சி​யில் வைக்​கப்பட உள்​ளன.

1957-ல் குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்​டத்​தில் உள்ள தேவினிமோரி என்ற தொல்​பொருள் தளத்​தில், பேராசிரியர் எஸ்​.என்​.சௌத்ரி தலை​மையி​லான குழு, புத்​தரின் நினைவு சின்​னங்​களான பேழை, செப்​புப்​பெட்​டி, பாட்​டில் ஆகிய​வற்றை கண்​டெடுத்​தது. தேவினிமோரி​யில் கண்​டெடுக்​கப்​பட்​ட​தால் இவை தேவினிமோரி நினை​வுச் சின்​னங்​கள் என்று அழைக்​கப்​படு​கின்​றன.

இந்​தப் பேழை​யானது பச்சை நிறக் கல்​லால் ஆனது. அதில், பிராமி மற்​றும் சம்​ஸ்​கிருத மொழி​யில் புத்​தர் பற்​றிய வாசகங்​கள் இடம் பெற்​றுள்​ளன. செப்​புப் பெட்டி பட்​டுத் துணி​யால் சுற்​றப்​பட்ட, புனித சாம்​பல் மற்​றும் மணி​களைக் கொண்​டுள்​ளது. தங்​கம் பூசப்​பட்ட பாட்​டில், புனித சாம்​பல், கரிமப் பொருட்​கள், களிமண் ஆகிய​வை​யும் உள்​ளன.

இவை, வதோத​ரா​வில் உள்ள மகா​ராஜா சாயாஜி​ராவ் பல்​கலைக்​கழகத்​தில் பாது​காக்​கப்​பட்டு வரு​கின்​றன. பிரதமர் மோடி கடந்த ஆண்டு இலங்கை பயணம் மேற்​கொண்​டார். அப்​போது, இரு நாடு​களுக்​கும் இடையி​லான ஆன்​மிக மற்​றும் கலா​சார உறவு​கள் வலுப்​படுத்​தப்​படும் என்று தெரி​வித்​தார். அதன்​படி, வரும் 11-ம் தேதி வரை இலங்​கை​யில் தேவினிமோரி நினை​வுச் சின்​னங்​கள் காட்​சிப்​படுத்​தப்பட உள்​ளன.

புத்​தரின் நினை​வுச் சின்​னங்​கள் இலங்கை தலைநகரம் கொழும்​பு​வில் உள்ள கங்​கா​ராமய புத்த மடால​யத்​தில் தற்​போது காட்​சிக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன. புனித சின்​னங்​கள் கங்​கா​ராமய புத்த மடால​யத்​துக்கு நேற்று வந்​த​போது, மடாலய தலைமை குரு கிரிந்தே அஸ்​ஸாஜி, இலங்கை சுகா​தார த்துறை அமைச்​சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புத்​த​சாசன மற்​றும் கலாச்​சார அமைச்​சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் வரவேற்​றனர்.

இந்த நிகழ்​வையொட்டி குஜ​ராத் மாநில ஆளுநர் ஆச்​சார்ய தேவ்​ரத் மற்​றும் குஜராத் துணை முதல்​வர் ஸ்ரீஹர்ஷ் சங்​கவி ஆகியோ​ரும் இலங்​கைக்கு செல்ல உள்​ளனர். இந்​தக் கண்​காட்சி ஆன்​மிக நிகழ்​வாக மட்​டுமன்​றி, இந்​தியா மற்​றும் இலங்கை இடையி​லான ஆழமான பண்​பாடு மற்​றும் கலா​சா​ரத்தை வெளிப்​படுத்​தும் ஒரு முக்​கிய நிகழ்​வாகக் கருதப்​படு​கிறது.

முன்​ன​தாக தாய்​லாந்​து, மங்​கோலி​யா, வியட்​நாம் மற்​றும் பூடான் நாடு​களி​லும் புத்​தரின் நினை​வுச் சின்​னங்​கள் காட்​சிப்​படுத்​தப்​பட்​டு, லட்​சக்​கணக்​கானோர் பார்​வை​யிட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

No comments: