News Just In

11/23/2025 05:54:00 AM

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள் ; செ. நிலாந்தன்

கிராமங்களை பாதுகாக்க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குங்கள் ; செ. நிலாந்தன்





குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி (Air Gun) வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை (20) நடைபெற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாவது அமர்வில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது மற்றும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையை முன் வைத்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் போது பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

No comments: