நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள WAXPOL OIL MART வெற்றிக் கிண்ணம்-2025 கடின பந்து T20 சுற்றுத் தொடரின் ஆரம்ப நிகழ்வும் முதலாவது போட்டியும் ஆரம்பமாகியுள்ளது.
முதலாவது போட்டியில் கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் அக்கறைப்பற்று ஸ்கோப்பியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியன ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடியதுடன் 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கறைப்பற்று ஸ்கோப்பியன்ஸ் விளையாட்டுக் கழகம் 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதால் கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் 30 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் முகாமையாளர் எம்.எல். பஸ்மீர் அவர்களின் நெறிப்படுத்தலில் தலைவர் எம்.ஐ.எம். றிபாஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக WAXPOL OIL MART நிறுவனத்தின் உரிமையாளர் யூ.எல்.எம். சப்ரி அவர்களும் கௌரவ அதிதியாக அமீனாஸ் நகையகத்தின் உரிமையாளர் ஏ.ஆர்.எம். கியாஸ் அவர்களும் விசேட அதிதிகளாக ஜூபிடர் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் யூ.எல். றிபாஜ், மீரா நகையகம் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எஸ்.எம். சர்ஜுன், பிரபல சமூக சேவையாளர் எம்.எச்.எம். கமால் அவர்களும் விளாஸ்டர் விளையாட்டு கழக ஊடக செயலாளர் நூருல் ஹுதா உமர், தவிசாளர் ஏ.சி.எம். நிஸார், செயலாளர் சி.எம்.எம். முனாஸ், உப தலைவர் எஸ். செய்யதீன் உட்பட மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments: