News Just In

6/10/2025 08:25:00 AM

உப தபால் நிலையங்கள் மட்டக்களப்பின் கிராமங்களில் அமைக்கப்படுமா.?இரா சாணக்கியன்


உப தபால் நிலையங்கள் மட்டக்களப்பின் கிராமங்களில் அமைக்கப்படுமா. பாராளுமன்றத்தில் 06.06.2025 அன்று இடம்பெற்ற கேள்விபதிலின் போது.


பதில்: அவரது கேள்வி அ.1 மட்டக்களப்பு கோரைத்தீவுபற்று பளுகாமம் பிரதேசத்தில் தபால் நிலையத்திற்கு கட்டிடமொன்று இருக்கின்றதா? தற்காலிகமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றதா? ஆம்.

அ.2. அதற்கான நிரந்தர கட்டிடம் இல்லை. உப தபால் நிலையத்திற்கு உகந்த வகையிலான கட்டிமொன்று உப தபால் நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரியினால் பெற்றுக் கொள்ள வேண்டியதுடன், தபால் திணைக்கள ஒதுக்கீடுகளின் ஊடாக உப தபால் அலுவலகத்திற்கு கட்டிடம் நிர்மாணிக்கப்பட மாட்டாது.
அ.3. தொடர்புடையது அல்ல
அ. தொடர்புடையது அல்ல.

நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே அங்கு ஒரு உப தபால் நிலையமே காணப்படுகிறது. உப தபால் அலுவலகங்கள் ஆரம்பிக்கப்படும் போதே, உப தபால் நிலையத்திற்கு பொருத்தமான இடம் தபால் அதிகாரியின் ஆலோசனைக்கு ஏற்ப நியமிக்கப்படும் அதிகாரியினால் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என உப தபால் அலுவலக அதிகாரியை நியமிக்கும் நடைமுறையில் காணப்படுகிறது. நாம் பதவிக்கு வரும் வரை கிராம பகுதிகளின் உப தபால் நிலையங்களுக்கு மாதாந்தம் 750 ரூபாய் வழங்கினோம். நகர்ப்புறங்களுக்கு 1500 ரூபாய் வழங்கினோம். இந்த பணம் போதுமானது அல்ல என்பதால் இருக்கின்ற பொருளாதார நிலைக்கு ஏற்ப அதிகரித்தோம். வருமானம் குறைவடைந்தது. அந்தவகையில் 50 ஆயிரம் ரூபாய் மாதாந்த வருமானத்திற்கு குறைந்தால் 2 ஆயிரம் ரூபாய் வழங்குகின்றோம். 50 ஆயிரத்திற்கும் 75 ஆயிரத்திற்கும் இடைப்படுமாயின் 4 ஆயிரம் ரூபாய் வழங்குகின்றோம். 75 ஆயிரத்திற்கும் ஒரு இலட்சத்திற்கும் இடைப்படுமாயின் 6 ஆயிரம் ரூபாய் வழங்குகின்றோம். ஒரு இலட்சத்திற்கு அதிகமாயின் 7500 ரூபாய் வழங்குகின்றோம். இந்த உப தபால் அலுவலகம் சுமார் 7 ஆயிரத்து 500 ரூபாய் மாதாந்த வருமானம் ஈட்டும் ஒன்று. அதனால் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையான கொடுப்பனவொன்றை பெற்றுக் கொடுக்க முடியும். அரசாங்க காணி உள்ள இடத்தில் மாத்திரமே நாம் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்போம்.

நன்றி சபாநாயகர் அவர்களே. கௌரவ அமைச்சர் அவர்களின் பதிலுக்கு நன்றி. இந்த கேள்வி பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களை பற்றியதான கேள்வியாகவே நான் இதனை வழங்கி இருந்தேன். ஆனால் இதிலே பளுகாமத்தை பற்றி மாத்திரம் குறிப்பிட்டு வந்திருக்கிறது. கௌரவ அமைச்சர் அவர்களே. நீங்கள் கூறும் விடயத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்களுடைய மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமங்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதால் நகரப் புறங்களை விட கிராமப் புறங்களில் மக்கள் பல விடயங்களுக்கு தபால் நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பல விடயங்களுக்கு தபால் மூலம் பதில் அனுப்பும் நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்ற வருகின்றன. கௌரவ அமைச்சர் அவர்களே, என்னுடைய கேள்வி என்னவென்றால், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது உதாரணமாக மான்காடு எனும் பிரதேசத்தில் ஒரு உப தபால் நிலையம் வேண்டும் என சுமார் 20 வருடங்களாக கேட்டு வருகின்றார்கள். அதேபோன்று மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் அம்பலாந்துறை போன்ற பிரதேசங்களில் இதேபோன்ற பிரச்சினை இருக்கின்றது. தபால் நிலையத்தை பிரதான வீதிக்கு கொண்டு வர வேண்டும்.

கொக்கட்ச்சோலையிலும் இதேபோன்றதொரு பிரச்சினை இருக்கின்றது. கொக்கட்டிச்சோலையில் தபால் நிலையம் இருக்கின்றது. ஆனால் மின்சார வசதியும் இல்லை. தொலைபேசி வசதியும் இல்லை. என்னுடைய கேள்வி என்னவென்றால், உங்களது அமைச்சின் கீழ் வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய அனைத்து பகுதிகளிலும் உள்ள விசேடமாக கிராமப் புறங்களில் இருக்கின்ற தபால் நிலையங்களை தனியாக அடையாளப்படுத்தி நாம் ஓர புதிய வேலைத்திட்டத்தை கொண்டுவந்து புதிதாக உப தபால் நிலையங்களை உருவாக்குவதாக இருக்கட்டும் அல்லது இருக்கின்ற தபால் நிலையங்களுக்கு வளங்களை வழங்குவதாக இருக்கட்டும் இவ்வாறாக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு உங்களது அமைச்சின் கீழ் வாய்ப்பு உண்டா?

புதிய இடங்களில் உப தபால் நிலையங்களை நிறுவுவது தொடர்பில் மக்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப சில வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சில உப தபால் நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றில் எந்தவொரு வருமானமும் இல்லை. ஆனால் வருவாயை மாத்திரம் கருத்தில் கொள்ளவில்லை. இது தொடர்பில் தபால் திணைக்களத்தின் ஊடாக ஆராயப்பட்டு வருகிறது. அதன்போது புதிய உப தபால் நிலையங்களையும் இணைத்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிட்டும். 12 தபால் நிலையங்கள் மற்றும் 2 உப தபால் நிலையங்களை புதிதார நிர்மாணிப்பதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தின் ஊடாக 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டம் கட்டமாக இதனை முன்னெடுக்க வேண்டியுள்ளது. நட்டத்தை எதிர்கொள்ளும் நிலையிலேயே தபால் திணைக்களம் காணப்படுகிறது. புதிய உப தபால் நிலையத்தை நிறுவுவதாக இருப்பின், அதற்கான தேவை மற்றும் எம்மால் ஈடுகட்ட முடியுமா என்பவை குறித்து ஆராந்தே முன்னெடுக்க வேண்டும்.

தபால் துறையானது தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. அது ஒரு இலாபம் ஈட்டும் நிறுவனம் அல்ல என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவுஸ்திரேலியாவின் தபால் துறையானது மிகவும் வளர்ச்சி கண்டுள்ளது. அந்தவகையில் அவுஸ்திரேலியாவிடம் இருந்து உதவியை பெற்று இலங்கையின் தபால் துறையை நவீனமயப்படுத்த முடியாதா என்று கேட்கிறேன். கடிதங்களை அனுப்புவது மாத்திரம் அன்றி அதற்கு அப்பால் சென்று சகல வசதிகளையும் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு இடமாக மாற்ற ஏதேனும் வேலைத்திட்டங்கள் காணப்படுகின்றனவா? என்பதே எனது கேள்வி.

இலாபம் ஈட்டக் கூடிய பல சேவைகள் இந்த தபால் துறையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது என்பது கவலைக்கு உரிய விடயமாகும். அவற்றை படிப்படியாக கொண்டு வருவதற்கே முயற்சித்து வருகின்றோம். அதற்கு தடையான சில விடயங்களும் உள்ளன. இதனை இலாபம் ஈட்டச் செய்ய முடியும். நாம் நிச்சயமாக இலாம் ஈட்டச் செய்வோம்.

No comments: