(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உப்புக்கும் முட்டைக்கும் பலத்த தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
27 ரூபாவிலிருந்து 35, 40 ரூபாவாக உயர்ந்து கொண்டே சென்ற முட்டை தற்போது சந்தைகளில் அறவே பெற முடியாத நிலை காணப்படுகிறது. முட்டை விற்கும் கடைகள் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன.
இதேவேளை உப்புக்கும் பலத்த தட்டுப்பாடு நிலவி வருகிறது. சதோச விற்பனை நிலையங்களிலும் உப்பு இல்லை என்றே அங்குள்ள விற்பனை அலுவலர்கள் தெரிவிக்கின்னர்.
இவ்விரு உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டால் கறி சமைப்பதில் அதிக சிரமத்தை எதிர்கொள்வதாக இல்லத்தரசிகளும் சமையற் காரர்களும் தெரிவிக்கின்றனர்.இதேவேளை எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மண்ணெண்ணை பெறுவதற்கும் வரிசை காணப்படுகிறது. சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மண்ணெண்ணை விநியோகப்பகுதி மூடப்பட்டுள்ளது
No comments: