
ஈரான் அணுதிட்டத்தின் மீதான அமெரிக்க தாக்குதல் சர்வதேச சட்டப்படி குற்றமாக இருந்தாலும், அவை பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என உச்ச தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தத்திற்கு பின்னரான அலி கமேனி முதல் உரை ஈரானிய அரச தொலைக்காட்சி சனலில் வெளியானது.
அமெரிக்காவின் தாக்குதல்
அதன்போது, அவர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதுபோல், ஈரானின் அணுத் திட்டம் அழிக்கப்பட்டதாகக் கூறுவது மிகைப்படுத்தல் மட்டுமே என்றும், உண்மையில் அமெரிக்காவின் தாக்குதலால் எதுவும் சிறப்பாக நடைபெறவில்லை என்றும் வலியுறுத்தினார்.
இத்தாக்குதல்கள் சர்வதேச சட்டப்படி குற்றமானாலும் அவை பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டினார்.
அமேரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈரானிடம் இருந்து சரணடைவை எதிர்பார்க்கின்றனர் என்று கூறிய கமேனி, இது ஒரு மிகப்பெரிய அவமதிப்பு எனக் கண்டித்தார்.
“ஈரான் போன்ற ஒரு பெரும் தேசத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுவது அவர்களுக்கு பெரியது. சரணடைவு என்பது எங்கள் மக்களுக்கு ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. நாங்கள் ஒன்றுபட்ட, வலிமையான மக்கள்” என அவர் தெரிவித்தார்.

ட்ரம்ப் “ஈரான் சரணடைய வேண்டும்” என்று கூறியதை "அவரது வாய்க்கு மிகுந்த அளவான வார்த்தை" எனக் கமேனி கிண்டலாக கூறினார்.
அத்துடன், இஸ்ரேலின் பல அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்பு அமைப்புகளை ஈரான் உடைத்துவிட்டு, இராணுவ தளங்களையும் நாகரிக இடங்களையும் தாக்கியதையும் அவர் வெற்றியாகக் கூறினார்.
போரில் வெற்றி
இதனுடன், கத்தாரில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையும் எடுத்துக்காட்டிய அவர், அந்த தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், அது ஒரு சக்திவாய்ந்த எச்சரிக்கையாக அமைந்தது என்று தெரிவித்தார்.
இதன்படி, ஈரானின் தாக்குதல்களை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தாலும், எதையும் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக மீண்டும் தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டால் அதற்கான செலவு எதிரிகளுக்கு மிகுந்ததாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், எவ்வளவு தாக்குதல்கள் வந்தாலும், ஈரான் எந்த நிலையிலும் சரணடையாது என்றும், இந்தப் போரில் வெற்றி பெற்றதும் இஸ்லாமிய குடியரசே எனவும் உறுதியாகக் கூறினார்
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தத்திற்கு பின்னரான அலி கமேனி முதல் உரை ஈரானிய அரச தொலைக்காட்சி சனலில் வெளியானது.
அமெரிக்காவின் தாக்குதல்
அதன்போது, அவர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதுபோல், ஈரானின் அணுத் திட்டம் அழிக்கப்பட்டதாகக் கூறுவது மிகைப்படுத்தல் மட்டுமே என்றும், உண்மையில் அமெரிக்காவின் தாக்குதலால் எதுவும் சிறப்பாக நடைபெறவில்லை என்றும் வலியுறுத்தினார்.
இத்தாக்குதல்கள் சர்வதேச சட்டப்படி குற்றமானாலும் அவை பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டினார்.
அமேரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈரானிடம் இருந்து சரணடைவை எதிர்பார்க்கின்றனர் என்று கூறிய கமேனி, இது ஒரு மிகப்பெரிய அவமதிப்பு எனக் கண்டித்தார்.
“ஈரான் போன்ற ஒரு பெரும் தேசத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுவது அவர்களுக்கு பெரியது. சரணடைவு என்பது எங்கள் மக்களுக்கு ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. நாங்கள் ஒன்றுபட்ட, வலிமையான மக்கள்” என அவர் தெரிவித்தார்.

ட்ரம்ப் “ஈரான் சரணடைய வேண்டும்” என்று கூறியதை "அவரது வாய்க்கு மிகுந்த அளவான வார்த்தை" எனக் கமேனி கிண்டலாக கூறினார்.
அத்துடன், இஸ்ரேலின் பல அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்பு அமைப்புகளை ஈரான் உடைத்துவிட்டு, இராணுவ தளங்களையும் நாகரிக இடங்களையும் தாக்கியதையும் அவர் வெற்றியாகக் கூறினார்.
போரில் வெற்றி
இதனுடன், கத்தாரில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையும் எடுத்துக்காட்டிய அவர், அந்த தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், அது ஒரு சக்திவாய்ந்த எச்சரிக்கையாக அமைந்தது என்று தெரிவித்தார்.
இதன்படி, ஈரானின் தாக்குதல்களை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தாலும், எதையும் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக மீண்டும் தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டால் அதற்கான செலவு எதிரிகளுக்கு மிகுந்ததாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், எவ்வளவு தாக்குதல்கள் வந்தாலும், ஈரான் எந்த நிலையிலும் சரணடையாது என்றும், இந்தப் போரில் வெற்றி பெற்றதும் இஸ்லாமிய குடியரசே எனவும் உறுதியாகக் கூறினார்
No comments: