News Just In

6/27/2025 01:07:00 PM

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆண்டு நிறைவைக் குறிக்கும் புதிய இலச்சினை அறிமுகம்

ச முர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆண்டு நிறைவைக் குறிக்கும் புதிய இலச்சினை அறிமுகம்



நூருல் ஹுதா உமர்

இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் 30 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை குறிக்கும் புதிய இலச்சினை அறிமுக நிகழ்வு (26) சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய இலச்சினையை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா, திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர், அபிவிருத்தி உத்தியோத்தர்களான றிகாஸா ஷர்வின், எம்.ஐ.சர்பீன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை குறிக்கும் புதிய இலச்சினையினை (Logo) சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத்தின் சிந்தனையில் வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: