முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிள்ளையானின் குறித்த அலுவலகத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று(30.05.2025) காலை 7 மணி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் எவரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
மேலும், இது தொடர்பான கருத்துக்களை குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரோ விசேட அதிரடிப் படையினரோ இதுவரை வெளியிடவில்லை.
இதேவேளை, மட்டக்களப்பில் இரண்டு நாட்களுக்கு முன்னால் பல கோணங்களின் அடிப்படையில் பிள்ளையானின் சகாக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
No comments: