மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உட்பட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர்கள் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் உட்பட ஐவரை எதிர்வரும் ஜூன் மாதம் 09ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஐவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
5/26/2025 06:58:00 PM
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உட்பட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: