
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் 18.02.2025 அன்று தொடங்கப்பட்ட 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை (மே 30) இன்றுடன் முடிவுக்கு வருவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் 2, 2025 திங்கட்கிழமை முதல், பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரே நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதே நாளில் ஒரு நாள் சேவைக்காக ஏற்கனவே முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும், அவசர அல்லது முன்னுரிமைத் தேவைகள் உள்ள விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட காலத்தில் ஒரு நாள் சேவையின் கீழ் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். தலைமை அலுவலகத்தில் சாதாரண சேவைகளின் கீழ் விண்ணப்பங்கள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
பிராந்திய அலுவலகங்களில் சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைக்கான விண்ணப்பங்கள் வழக்கம் போல் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: