News Just In

1/10/2025 07:05:00 AM

அம்பாறை - பெரிய நீலாவணை பகுதி பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி!

தமிழர் பகுதி பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி



அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய சென்ற பெண், பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டமைக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் (08) நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் குறித்த தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அம்பாறைக்கும் மட்டக்களப்புக்கும் இடைப்பட்ட பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்ற பெண்ணொருவர் அங்கிருந்த அறையொன்றில் பூட்டப்பட்டு படுமோசமாக தாக்கப்பட்டார்.

இந்நிலையில், அப்பெண், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது

No comments: