News Just In

1/30/2025 01:21:00 PM

இயற்கை இடரினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கி வைப்பு!

இயற்கை இடரினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கி வைப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சமீபத்திய சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கன மழை வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்ட வருகின்றன.

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் மேற்படி இயற்கை இடரினால் பகுதியளவில் வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈட்டு காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் யூ. உதயசிறீதர் தலைமையில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக ரூபாய் பத்தாயிரம் விகிதம் முற்பணமாக 30 குடும்பங்களுக்கு காசோலை வழங்கிவைக்கப்பட்டது

No comments: