News Just In

11/21/2024 07:08:00 PM

வடக்கு ஆளுநர் தலைமையில் அவசர கூட்டம் நாளை!

வடக்கு  ஆளுநர் தலைமையில் அவசர கூட்டம் நாளை

பருவகால மழை 


பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை (22) காலை 10 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

வட மாகாண பிரதம செயலர், மாவட்டச் செயலர்கள், உள்ளூராட்சி அமைச்சின் செயலர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், நீர்பாசன திணைக்களப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், இலங்கை மின்சார சபையின் பிராந்திய முகாமையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், வட மாகாண மூத்த பிரதி பொலிஸ் மாஅதிபர், இராணுவக் கட்டளைத்தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.

வட மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் எதிர்வுகூறப்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பதால் ஏற்படும் பாதிப்புக்களை தணிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது

No comments: