News Just In

11/09/2024 09:40:00 AM

ஈழத்து சௌந்தரராஜன் காலமானார்


ஈழத்து சௌந்தரராஜன் காலமானார்



ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்படமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் காலமானார்.

இவர் தனது 81ஆவது வயதில் நேற்றையதினம் (08.11.2024) உயிரிழந்தார்.

1980களில் தென்னிந்திய பாடகரான சௌந்தரராஜன், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக்கச்சேரி நடாத்துவதற்காக வருகை தந்திருந்தார்.

இதன்போது, அவருடன் இணைந்து அவரைப்போலவே இனிமையாக பாடிய பைரவிப்பிள்ளை விஜயரட்ணத்திற்கு தென்னிந்திய திரைப்பட பாடகரான சௌந்தரராஜன், ஈழத்து சௌந்தரராஜன் என்ற பட்டத்தை வழங்கியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, வடமராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல ஆலயங்களுக்கு அவர் தனது குரலில் அதிகளவான பாடல்களை பாடியுள்ளார்.

அவரது புகழுடல் நாகர்கோவில் இந்து மயானத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது

No comments: