இலங்கையின் மின்சார அமைப்பு விரிவாக்கத்துக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி!
இலங்கையின் மின்சாரத் துறையில் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 200 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தொகை போட்டித்தன்மை வாய்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்படுத்துவதற்கும் எளிதாக்குவதற்கும் மின் உற்பத்தி செலவினங்களைக் குறைப்பதற்கும் இன்றியமையாதது என இலங்கைக்கான ADB நாட்டின் பணிப்பாளர் தகாபுமி கடோனோ தெரிவித்துள்ளார்.
மொத்தத் தொகையில், 150 மில்லியன் டொலர் இலங்கை மின்சார சபைக்கும், 50 மில்லியன் டாலர் வரைறுக்கப்பட்ட இலங்னை மின்சார நிறுவனத்துக்கும் வழங்கப்படும்.
இரண்டு நிதியுதவிகளும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உத்தரவாதமாக இருக்கும்.
இலங்கை 2016 இல் 100% வீட்டு மின்மயமாக்கலை எட்டியது.
விநியோகிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்புகள் உட்பட 2023 இல் உச்ச தேவை சுமார் 2,800 மெகாவாட்களை எட்டியது.
மேலும் இந்த அளவு 2030 ஆம் ஆண்டில் கணிசமான அளவு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11/25/2024 03:40:00 PM
இலங்கையின் மின்சார அமைப்பு விரிவாக்கத்துக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: