News Just In

8/29/2024 05:54:00 AM

அட்டாளைச்சேனையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அட்டாளைச்சேனையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்


(அஸ்ஹர் இப்றாஹிம்)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை வெற்றிபெறச் செய்யும் வகையில் பொத்துவில் தொகுதியில் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் அட்டகளைச்சேனையில் கலந்துரையாடலின்று அண்மையில் நடைபெற்றது.

பொத்துவில் தொகுதி ஐக்கிய தேசிய கட்சி பிரதான அமைப்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments: