News Just In

8/20/2024 01:52:00 PM

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த சிரேஷ்ட சட்டத்தரணிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு!




(அஸ்ஹர் இப்றாஹிம்)
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த சட்டத்துறையில் 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக தங்களது தொழில்துறையில் தடம் பதித்திருக்கின்ற சட்டத்தரணிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வானது ( 19)நிந்தவூரில் அமைந்துள்ள ஹாப்மூன் ரெஸ்டாரண்டில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

குறித்து நிகழ்வானது சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம். எம்.முஸ்தபாவின் நெறிப்படுத்தலிலும், தலைமையிலும் அவரது பூரணஅனுசரணையோடு இடம் பெற்றதோடு இந்நிகழ்வில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எச்.அறூஸ், செயலாளர் ஏ.எம்.நஸீல், பொருளாளர் எம்.எம்.எஃப். ஷாமிலா ஆகியோரின் பங்குபற்றலுடனும் ஏனைய சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக இந்நிகழ்வில் 13 சட்டத்தரணிகள் சிரேஷ்ட சட்டத்தரணிகளாக கௌரவிக்கப்பட்டிருந்தார்கள் என்பதுடன் அவர்களுக்கான பதக்கங்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும் குறித்த இந்த நிகழ்வானது சட்டத்தரணிகள் சங்கத்தின் மாதாந்த கூட்ட அமர்வின் ஒரு அங்கமாக இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுக்கு சிரேஷ்ட, கனிஷ்ட சட்டத்தரணிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.எம்.முஸ்தபா,.ஏ.ஏம்.நஸீல்,வை.எம்.ஏ.சியாத்.ஏ.எச்.அறூஸ்
.கே.எல்.ஏ.சலீம்.எம்.ரி.சபீர் அகமட்எம்.எம்.எப்.சாமிலா.எம்.எம்.சஹூபீர்
ஏ.எல்.றியாஸ்ஆதம்,எம்.எஸ்.எம்.அன்சார்.எம்.பி.எம்.பெளஸான்.கே.றிம்சியா.எம்.ஏ.எப்.மிபாஸா ஆகிய சிரேஸ்ட சட்டத்தரணிகள் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.




!

No comments: