News Just In

8/09/2024 05:27:00 PM

காரைதிவு பிரதேச செயலகப் பிரிவில் கல்வியமைச்சின் மூன்றாம் நிலை கல்வித் திட்டத்தை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!



(எம்.எம்.றம்ஸீன்)

கல்வியமைச்சின் திட்டத்திக்கமைய 2024 ஆம் ஆண்டு உயர்தர பரிட்சை எழுதிய மாணவர்களுக்கான மூன்றாம் நிலை கல்வி, தொழில் கல்வி, பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் நடைபெற்ற 3 மாத பயிற்சி நெறியினை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோஸ்தர்களும்,பயிற்சி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

No comments: