(அஸ்ஹர் இப்றாஹிம்)
வன்னி விழிப்புலனற்றோர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினுடாக ஒரு தொகுதி உலருணவுப் பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு ஒந்தாச்சிமடத்தினைச் சேர்ந்த கஜேந்திரன்,ரஞ்சினி அவர்களின் அன்பு குழந்தைகளானக.திபிஷா, க.திபிஷன் க..தியான் ஆகிய மூன்று குழந்தைகளின் 04 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவுஸ்ரேலியாவில் வசிக்கும் குழந்தைகளின் மாமா அவர்களினால் இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சியில் இயங்கி வரும் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தை சேர்ந்த அதி கஸ்டத்தில் வாழ்ந்து வரும் (30)குடும்பங்களை தெரிவுசெய்து, ஒருவருக்கு (ஐந்தாயிரம் ரூபா5000/=) பெறுமதியான,உலர் உணவு பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இணைந்த கரங்கள் சார்பாக காந்தன், விவேக் ஆகியோர் கலந்துகொண்டு அவர்களுக்கு இதனை வழங்கி வைத்தனர்.
No comments: