அம்பாறை ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தின் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் தமிழ்மொழித்தின இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
16 பாடசாலை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்புடன் ஆரம்பமாகிய நிகழ்வில்,
அதிதிகள் மலர்மாலை அணிவித்து கலாசார நிகழ்வுகளுடன் வரவேற்கப்பட்டனர்.நிகழ்வானது ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், ஆலையடிவேம்பு கோட்ட பாடசாலைகளின் அதிபர்களும், திருக்கோவில் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்களும், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். ஆலையடி வேம்பு கோட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற தமிழ்த் தின போட்டியில் முதலாம் கட்ட நிகழ்வின் எழுத்தாக்க போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: