News Just In

6/12/2024 05:50:00 PM

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் திராய்மடு பகுதிக்கு மாற்றம் !




மட்டக்களப்பு மாவட்ட செயலகமானது நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் திராய்மடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக கட்டடத்தில் இயங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய கட்டடத்தொகுதியில் நிர்வாக பணிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முதளிதரன் ஆரம்பித்து வைத்தார்.ஆயினும் சில கிளைகளின் சேவைகள் மாத்திரம் மறு அறிவித்தல் வரை பழைய மாவட்ட செயலகம் இயங்கிய கட்டடத்தில் நடைபெறும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் விளையாட்டுப் பிரிவு, நுகர்வோர் அதிகார சபை, சிறு கைத்தொழில் பிரிவு, சமூக பாதுகாப்பு சபை, பிரதி பதிவாளர் நாயக பிரிவு (கிழக்கு வலயம்), காணி பதிவாளர் பிரிவு, நன்னீர் மீன் வளர்ப்பு பிரிவு, மனித வள அபிவிருத்தி அதிகார சபை, மாநாட்டு மண்டபம், யு.என்.டி.பி. ஆகிய பிரிவுகள் தற்போது இயங்கி வருகின்றன.

மேற்கூறப்பட்ட இப்பிரிவுகள் தவிர, ஏனைய சேவைகள் யாவற்றையும் திராய்மடு பகுதியில் அமைந்துள்ள புதிய கட்டடத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

கோட்டையில் இயங்கிய மாவட்டசெயலகத்தின்இடவசதிபற்றாக்குறையினால் 2016ஆம் ஆண்டு புதிய மாவட்ட செயலகத்திற்கான கல் வைக்கப்பட்டு இந்த கட்டடத்தொகுதியின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

No comments: