News Just In

6/14/2024 04:38:00 PM

காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு! பயன்படுத்தப்பட்டது ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்ட துப்பாக்கியா?



மட்டக்களப்பு, காத்தான்குடியில் சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.ஒரு வீட்டினுள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நபரை, சீ.சீ.டி.வி கமெராவினால் அடையாளம் கண்டுள்ளார்கள் பொதுமக்கள்.

காத்தான்குடியைச் சேர்ந்த ஷகீட் என்பவரே தாக்குதலை மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் அடையாளம் கண்டுள்ளதாக  அறியமுடிகிறது 

இந்த ஷகீட் முன்னர் மத அடிப்படைவாத தீவிரவாதக் குழு ஒன்றில் அங்கம்வகித்ததாகவும், ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக் குற்றவாளியும், ரீ.எம்.வி.பி. உறுப்பினருமான சாந்தன் என்பவரை காத்தான்குடியில் வைத்து படுகொலைசெய்ததும் இந்த ஷகிட்தான் என்றும் கூறப்படுகின்றது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஏராளமான படுகொலைச் சம்பவங்களில் இவர் பங்குபற்றியவர் என்றும் கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியே இன்றைய காத்தான்குடி துப்பாக்சிசூட்டுச் சம்பவத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றார்கள் ஷகீட்டினுடைய நண்பர்கள்.

காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் காத்தான்குடியில் தேடுதல்வேட்டை மேற்கொண்டு வருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் காத்தான்குடிச் செய்திகள் தெரிவிக்கின்றன

. இணைப்பு 1
குறித்த சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கியுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தீக் சிபானியா (வயது32) என்பவரே இச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதுடன் இப் பெண்ணின் கணவர் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் அவர் ஒரு மௌலவி எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments: