மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து கடந்த 23 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனின் சாரதியும் குழந்தையொன்றும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments: