News Just In

6/02/2024 05:01:00 AM

ஒரு வருடம் முன்னரே உயர்தரப் பரீட்சையில் தோற்றி சாதித்த மாணவி!




நேற்று வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒரு வருடம் முன்கூட்டியே பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளனர்.

கேகாலை மாவட்டம் கன்னுதோட்டையை சேர்ந்த ஃபாத்திமா பஹ்மா பாஹிம் கன்னுதோட்டை சுலைமானியா கல்லுரியில் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவி ஆவார் 

இவர் அடுத்த வருடமே உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக ஒருவருடத்திற்கு முன்னரே அதாவது இவ்வாண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளார்.

இவரது முயற்சிக்கு உந்து சக்தியளிக்கும் வகையில் நேற்று வெளியான பரீட்சை பெருபேறுபள் அமைந்துள்ளன. இரண்டு பாடங்களில் அதி விசேட சித்திகளையும் ஒரு பாடத்தில் விசேட சித்தியையும் பெற்று சாதனைப்படைத்துள்ளார்

No comments: