News Just In

6/13/2024 07:05:00 PM

அரசியல் குழுக்கள் வன்முறையில் மீண்டும் ஈடுபடலாம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர்!




கடந்த காலங்களில் வன்முறை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல் குழுக்கள் மீண்டும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது என நம்ப முடியாது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கலந்து கொண்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் பெரும் புனர்வாழ்வை மேற்கொண்டதுடன் கிளர்ச்சி இத்துடன் முடிவடையும் என அனைவரும் நினைத்தோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக 1989 இல் மீண்டும் இந்த வன்முறைச் இலங்கையில் இடம்பெற்று உடமைகளும் உயிர்களும் அழிக்கப்பட்டன. அதன் பின்னரும் துரதிர்ஷ்டவசமாக, 2022 ஆம் ஆண்டு மே 9 அன்று 91 வீடுகளை அழிக்கும் அளவுக்கு ஒரு குழு உருவானதாகவும் அவர் குறிப்பிட்டார்

எனவே இதுபோன்ற செயல்களைச் செய்யும்போது, ​​எதிர்காலத்தில் இதைச் செய்ய மாட்டார்கள் என என்ன நிச்சயம்?” எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்

No comments: