News Just In

6/11/2024 06:30:00 AM

திருகோணமலையில் இந்தியாவின் கைத்தொழில் வலயம்: ஜெய்சங்கர் உறுதி




இலங்கையின் திருகோணமலையில் ஒரு கைத்தொழில்துறை வலயம் ஒன்றை நிறுவவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இதனை இன்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்

இது ஏராளமான இந்திய முதலீட்டாளர்களையும் பிற நாடுகளிலிருந்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை முன்னெடுக்கவும், பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை ஏற்பாடு செய்யவும் தாம் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் புதிய பொருளாதார மாற்றச்; சட்டம் விவசாயம், சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார நிர்வாகத்தில் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும் என்று ஜனாதிபதி விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க யோசனை அடுத்த ஜூலை மாதத்திற்குள் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments: