News Just In

5/08/2024 11:36:00 AM

சம்மாந்துறையில் தொழுநோய் விழிப்புணர்வு செயலமர்வு.!



(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனைப் பிராந்தியத்தில் தொழு நோயினால் பாதிக்கப்பட்டு இனங்காணப்பட்ட நோயாளர்களுக்கு முறையாக சிகிச்சையளிப்பதற்கும்,வைத்திய சிகிச்சை வழங்கும் பொருட்டும் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (08) அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல். பிர்தெளஸியாவின் ஒருங்கிணைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபாவின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம வளவாளராக கல்முனை பிராந்திய தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சீ.எம்.பசால் கலந்து கொண்டு தொழுநோய் சம்மந்தமான தெளிவான விளக்கம் வழங்கினார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: