News Just In

5/11/2024 04:18:00 PM

ஒலுவில் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கும், அல் ஹம்றா மகா வித்தியாலயத்திற்கும் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி ஒதுக்கினார் ஹரீஸ் எம்.பி!



நூருல் ஹுதா உமர்

அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள ஒலுவில் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கும் கமு/அக்/ அல்- ஹம்றா மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்கள் இன்று (11) நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல் கட்டிட நிர்மாண பணிகளுக்கென ஜும்மா பள்ளிவாசல் தலைவர் பொறியியலாளர் ஏ.எம். ராபி, செயலாளர் எம்.பி.எம். ஹுசைன் ஆகியோர் அடங்களாக பள்ளிவாசல் நிர்வாகத்தினரை சந்தித்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் ஒலுவில் மக்களின் பிரச்சினைகள், குறைநிறைகளை ஆராய்ந்ததுடன் கமு/அக்/அல்- ஹம்றா மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்களையும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர் முன்னிலையில் அதிபர் யூ.கே. அப்துல் ரஹீம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது ஒலுவில் ஜும்மா பெரிய பள்ளிவாசல் உப தலைவர் எம். நஷீர், நம்பிக்கையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர்களான எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத், ஏ. கலீலுர் ரஹ்மான், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பீ.ரீ. ஜமால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

No comments: