News Just In

5/07/2024 08:15:00 AM

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆண் தாதி கைது!





யாழ்ப்பாணம், தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மேல்நிலை அதிகாரி ஒருவரை வைத்தியசாலையில் கடமை நேரத்தில் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் தாதி ஒருவர் தனக்குக் கிடைக்க வேண்டிய சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு ஆகியன கிடைக்கவில்லை எனச் சம்பந்தப்பட்ட மேல்நிலை அதிகாரியை வினவியதுடன் திடீரென அவர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மேல்நிலை அதிகாரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட தாதியைக் கைது செய்துள்ளனர்.


No comments: