News Just In

5/12/2024 08:08:00 PM

அரச ஊழியர்களின் சம்பளம் மேலும் அதிகரிக்கும் : ரணில் உறுதி!




அரச ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: