News Just In

5/25/2024 01:37:00 PM

3ஆம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே: எச்சரிக்கை விடுத்த இந்திய ஜோதிடர்!




மூன்றாம் உலக போர் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது என இந்திய ஜோதிடர் குஷால் குமார் வெளியிட்டுள்ள தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3ஆம் உலகப் போர் பற்றிய கருத்துக்கள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. முதல் 2 உலகப் போர்களின் தாக்கங்கள் உலக மக்களின் நினைவில் இருந்து அகலாத நிலையில் 3ஆம் உலகப் போர் குறித்த தகவல் தற்போது பேசுப்பொருளாக காணப்படுகின்றது.

ரஷ்யா- உக்ரைனுக்கு இடையிலான போர், வடமேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் நிலவி வந்த அமைதியற்ற சூழ்நிலைகளினால் 3ஆம் உலகப் போர் தொடர்பான தகவல்கள் அண்மை காலங்களில் வெளியாகி வருகின்றன.

இந்திய ஜோதிடரான குஷால் குமார் தனது சமூக வலைத்தளங்களில் 3ஆம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன.

இவ்வருடம் (2024) மே மாதம் போர் நிலைமைகள் மிகவும் தீவிரமாக காணப்படும், சில நாடுகளின் ஆட்சியாளர்கள் போர் தொடர்பான சூழ்நிலைகளை சமாளிக்கவும் கட்டுப்படுத்தவும் சிரமங்களை எதிர் நோக்குவர்.

மேலும் சில அதிகாரிகளின் உடல்நிலை மோசமடையும். இதனால் அவர்கள் பதவி விலக நேரிடும். அரசியல் களத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் போகும் என தனது வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

குறித்த உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலை எதிர்வரும் ஜூன் மாதம் 10 18 29 ஆகிய திகதிகளில் ஏற்படக்கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: