News Just In

3/18/2024 08:42:00 PM

தமிழர்களை ஒரு குறுந்தேசிய இனமாக மாற்ற திட்டம்!




சிங்கள தேசம் தமிழர்களை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஒரு குறுந்தேசிய இனமாக மாற்றும் திட்டம் அதன் அடிப்படையில் தமிழர்களின் பிரச்சனையை ஒரு கால் பந்தாட்டம் போல அங்கும் இங்கும் உதைத்து வருகின்றனர்.

எனவே தமிழ் தேசியத்தின் பற்றாளர்கள் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ் தேசத்தை தமிழீழம் என்ற வார்தையை பாவியுங்கள் அப்போது தான் நாங்கள் எமது இலக்கை அடையமுடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு கோவிந்த வீதியிலுள்ள கட்சியின் புதிய தலைவராகக தெரிவு செய்யப்பட்ட அருண் தம்பிமுத்துவின் காரியாலயத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம் தமிழர்களாகிய எங்களுக்கு அரசியல் தீர்வு இதுவரை கிடைக்கவில்​லை பொருளாதார நிலையும் மந்தமாக இருக்கின்றது அதேபோல எமது மக்களின் வாழ்க்கையும் பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் குடிபரம்பல் வீழ்சியடைந்து தமிழீழத்தின் சிலபாகங்களான அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களின் தொகை ஒரு இலச்சத்துக்கு குறைவாக காணப்படும் நிலை இருக்கின்றது அதேபோல வன்னி மட்டக்களப்பில் கூட எமது மக்கள் தொகை குறைந்து கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்

No comments: