News Just In

3/03/2024 02:42:00 PM

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வ அஞ்சலி!



சாந்தனுக்கு கிளிநொச்சியில் பெருமளவிலான மக்கள் ஒன்றுதிரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி நகர டீப்போ சந்தியில் கறுப்புகொடிகள் கட்டி பந்தல்கள் அமைக்கப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் அரசியில் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பெருமளாவானோர் கலந்து கொண்டு உனர்பூர்வ அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

வவுனியாவில் இருந்து ஏ-09 வீதி வழியாக எடுத்து வரப்பட்ட சாந்தனின் ஊர்தி 03.03.2024, ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணிக்கு, கிளிநொச்சி டிப்போச்சந்திக்கு அருகில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

No comments: