News Just In

3/01/2024 01:22:00 PM

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது சாந்தனின் உடல்! இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது



கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ள சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு, ஒழுங்குகள் செய்யப்பட்டதன் பின்னரே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என சாந்தன் குடும்பத்தார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சாந்தனின் மைத்துனர் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்தநிலையில், சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அவரது குடும்பத்தார் லங்காசிறிக்கு வழங்கிய தகவலில்,

யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பின்னர் சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளைய தினம் சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டு, நாளை மறுதினம் சாந்தனின் தாயாரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கிரியைகள் நடத்தப்படும்.

மேலும், அங்கு பொது அமைப்புக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்காக சாந்தனின் உடல் வைக்கப்படும்.அதன் பின்னர் தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

No comments: