வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கில் தொல்லியல் திணைக்களம் உண்மைக்குபுறம்பானஅறிக்கையைதிட்டமிட்டுநீதிமன்றில்சமர்பித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி விவகாரம் தொடர்பில் வவுனியா நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், நீதிமன்றின் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடொன்றை செய்ய தீர்மானித்துள்ளோம்.
கைதுசெய்யப்பட்ட 8 அப்பாவி சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டு, எதிர்வரும் 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிஸாரும் தொல்லியல் திணைக்களத்தினரும் இணைந்தே இந்த அறிக்கையை திட்டமிட்டு நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.'' என்றார்.
No comments: