News Just In

3/18/2024 10:04:00 AM

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !




இந்த நாட்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார்.

சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும், தோல் எரியும் தன்மையை காணப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

சிறு பிள்ளைகள் உட்பட பாடசாலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது எனவும் தோல் சிகிச்சை வைத்திய நிபுணர் இந்திரா கஹ்விட்ட தெரிவித்துள்ளார்.

No comments: