News Just In

2/13/2024 02:44:00 PM

பொதுமக்கள் தொடர்ந்து நீர் அருந்த வேண்டும்!



நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான சூழ்நிலை நிலவுவதால் உடலில் ஏற்படும் நீரிழப்பில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறிப்பாக சிறுவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

களைப்பு, தூக்கம், சோர்வு, தலைவலி, வாந்தி மற்றும் பசியின்மை ஆகியவை நீரிழப்புக்கான அறிகுறிகளாகும்.

எனவே, நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் தொடர்ந்து நீர் அருந்த வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மழையுடனான வானிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தற்போது சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்தாலும் ஏப்ரல் மாதம் வரையில் வறட்சியான வானிலையே நிலவும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: