News Just In

2/11/2024 02:42:00 PM

பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!



அடுத்த வாரம் முதல் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு வழங்கப்படும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

 இதுவரையில் கிடைத்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு விரைவாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments: